Saturday, March 25, 2023
Home வர்த்தகம் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

புதுடெல்லி

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது இந்திய மதிப்பில் 6.50 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

தொழிலதிபர் அதானி, இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு $25.2 பில்லியனாக உள்ளது.

$20.4 பில்லியன் சொத்து மதிப்புடன் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மூன்றாமிடத்தில் உள்ளார்.

$15.4 பில்லியன் சொத்து மதிப்புடன் தொழிலதிபர் ராதாகிஷான் தாமனி நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்

$12.8 பில்லியன் சொத்து மதிப்புடன் ஹிந்துஜா பிரதர்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளனர்

கொரோனா தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டு வரும் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவின் சைரஸ் பூனவல்லா $11.5 பில்லியன் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார்.

$11.4 பில்லியன் சொத்து மதிப்புடன் கட்டிட தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பல்லோஞ்சி மிஸ்திரி, ஏழாம் இடத்தில் உள்ளார்.

$11.3 பில்லியன் சொத்து மதிப்புடன் கோடாக் மஹிந்திரா வங்கி இயக்குநர், உதய் கோடாக், எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

$11 பில்லியன் சொத்து மதிப்புடன் தொழிலதிபர் கோத்ரேஜ் குடும்பம் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

$10.3 பில்லியன் சொத்து மதிப்புடன் ஏர்டெல் குழும தலைவர் பாரதி மிட்டல், பத்தாவது இடத்தில் உள்ளார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments