Friday, December 1, 2023
Home வர்த்தகம் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

புதுடெல்லி

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது இந்திய மதிப்பில் 6.50 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

தொழிலதிபர் அதானி, இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு $25.2 பில்லியனாக உள்ளது.

$20.4 பில்லியன் சொத்து மதிப்புடன் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மூன்றாமிடத்தில் உள்ளார்.

$15.4 பில்லியன் சொத்து மதிப்புடன் தொழிலதிபர் ராதாகிஷான் தாமனி நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்

$12.8 பில்லியன் சொத்து மதிப்புடன் ஹிந்துஜா பிரதர்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளனர்

கொரோனா தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டு வரும் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவின் சைரஸ் பூனவல்லா $11.5 பில்லியன் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார்.

$11.4 பில்லியன் சொத்து மதிப்புடன் கட்டிட தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பல்லோஞ்சி மிஸ்திரி, ஏழாம் இடத்தில் உள்ளார்.

$11.3 பில்லியன் சொத்து மதிப்புடன் கோடாக் மஹிந்திரா வங்கி இயக்குநர், உதய் கோடாக், எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

$11 பில்லியன் சொத்து மதிப்புடன் தொழிலதிபர் கோத்ரேஜ் குடும்பம் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

$10.3 பில்லியன் சொத்து மதிப்புடன் ஏர்டெல் குழும தலைவர் பாரதி மிட்டல், பத்தாவது இடத்தில் உள்ளார்.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments