Saturday, March 25, 2023
Home Uncategorized சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இன்றைய இந்தியன் பிரீமியர் லீக் 2020 (Indian Premier League) தொடரின் 22 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் 6 வெற்றி புள்ளிகளி பெற்று, அட்டவனையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதுவரை ஆறு போட்டிகளில் பங்கேற்று 3 தோல்வி மற்றும் 3 வெற்றிகளை பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அதன் பிறகு வெற்றி பெற 202 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடிய பஞ்சாப் அணி 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் 69 ரன்கள் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒன்று மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 3 மாற்றங்களுடன் களம் இறங்கியது. ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 40 பந்துகளில் 52 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 55 பந்துகளில் 97 ரன்களும் எடுத்தனர்.

கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 20 ரன்களும், அபிஷேக் சர்மா 12 ரன்களும் எடுத்தனர். பஞ்சாபைப் பொறுத்தவரை, ரவி பிஷ்னாய் 29 விக்கெட்டுக்கு 3 ரன்களும், அர்ஷ்தீப் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஒரு விக்கெட்டை முகமது ஷமி எடுத்தார்.

202 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கு நிக்கோலஸ் பூரன் மட்டும் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

அதில் மூன்று பேர் ரன் எதுவும் எடுக்காமல் டாக்-அவுட் ஆனார்கள். ஹைதராபாத் அணியை பொறுத்த வரை ரஷீத் கான் மூன்று விக்கெட்டும், கே கலீல் அகமது, டி நடராஜன் தலா இரண்டு விக்கெட்டும், அபிஷேக் சர்மா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments