Monday, October 2, 2023
Home தமிழகம் தொல்லியல் படிப்பில் தமிழ் புறக்கணிப்பு - மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

தொல்லியல் படிப்பில் தமிழ் புறக்கணிப்பு – மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை

மத்திய தொல்லியல் துறையின் பட்டயபடிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய தொல்லியில் துறையின் பட்ட படிப்பில் சேர கல்வித்தகுதியாக தமிழ்மொழியையும் சேர்க்க வேண்டும். பல மொழிகளின் 48 ஆயிரம் பழங்கால கல்வெட்டுகளில் 28 ஆயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.

பண்டிட் தீனதயாள் பல்கலைகழகத்தில் முதுகலை தொல்லியல் பட்டயபடிப்பில் சேர்வதற்கு, சமஸ்கிருதம் பாலி, பிராகிருதி, பெர்சியன், அரபி மொழிகள் குறைந்த பட்ச தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலையின் முதுகலை தொல்லயில் துறை பட்டய படிப்பிற்கான குறைந்த பட்ச தகுதியில் தமிழ்மொழியையும் சேர்க்க வேண்டும்.

2004 ஆம் ஆண்டிலேயே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் தற்போது புறக்கணிக்கப் பட்டு உள்ளது வேதனையளிக்கிறது. தமிழ்மொழியை சேர்ப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments