Wednesday, March 29, 2023
Home வர்த்தகம் தங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு

தங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு

சென்னை

தங்கத்தின் விலை கடந்த 1-ந் தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 815 ஆக இருந்தது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், உலக அளவிலான பொருளாதார மாற்றம் மற்றும் பங்கு சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கத்தின் விலை திடீரென பவுனுக்கு ரூ.1,464 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலை மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனையானது. இதனால், நகை கடைகளில் தங்கம் விற்பனை நேற்று அதிகரித்து காணப்பட்டது.

தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிக அளவில் குறைந்ததாலும், பண்டிகைகள் நெருங்குவதாலும், பொதுமக்களிடையே தங்கம் வாங்க மிகவும் அதிகமாக ஆர்வம் ஏற்பட்டது. நேற்று சென்னையில் உள்ள ஜி.ஆர்.டி. ஜூவல்லரி, பிரின்ஸ் ஜூவல்லரி, லலிதா ஜூவல்லரி, கசானா ஜூவல்லரி, என்.ஏ.சி. ஜூவல்லரி, ஜோய் அலுக்காஸ், மலபார் கோல்டு ஜூவல்லரி, சரவணா ஸ்டோர்ஸ் போன்ற நகை கடைகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் ஏராளமாக சென்று நகை வாங்கினர்.

நகை கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டன. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,464 குறைந்தது குறித்து சென்னை நகை கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, “இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள கொள்கை மாற்றம் காரணமாக சில்லரைக்கு விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் தங்க விலை குறைவுக்கும், பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறினார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments