Tuesday, October 3, 2023
Home தமிழகம் முதலமைச்சர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு - தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்

முதலமைச்சர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு – தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயம்மாள் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் காலமானார். உடனடியாக சொந்த ஊர் சென்ற முதலமைச்சர் பழனிசாமி தாயார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், குடியரசு துணைத் தலைவர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்திருந்தார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

தாயார் மறைவுக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி சென்னை திரும்பவில்லை. அ.தி.மு.க ஆண்டு விழாவைக் கூட சேலத்தில் கொண்டாடினார். இந்நிலையில் நேற்றிரவு முதலமைச்சர் பழனிசாமி சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்துக்கு வந்து இன்று சந்தித்தார். அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி ஆகியோர் இருந்தனர்.

முதலமைச்சர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வரிடம் பேசிய ஸ்டாலின், அவரது தாயார் மறைவு குறித்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments