Friday, December 1, 2023
Home இந்தியா மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்

மும்பை

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதில் தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் புதிதாக 7 ஆயிரத்து 539 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 25 ஆயிரத்து 197 ஆக உயர்ந்து உள்ளது. இதில் நேற்று மட்டும் 16 ஆயிரத்து 177 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 14 லட்சத்து 31 ஆயிரத்து 856 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேபோல மராட்டியத்தில் மேலும் 198 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவரை மாநிலத்தில் 42 ஆயிரத்து 831 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 88.10 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 2.64 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 84 லட்சத்து 2 ஆயிரத்து 559 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.34 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் மும்பையில் புதிதாக 1, 463 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நகரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 332 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மும்பையில் மேலும் 49 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர்.

தாராவியில் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 459 ஆகி உள்ளது.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments