Friday, September 29, 2023
Home இந்தியா பீகார் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட வேட்பாளர் - கொலையாளியை அடித்தே கொன்ற ஆதரவாளர்கள்

பீகார் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட வேட்பாளர் – கொலையாளியை அடித்தே கொன்ற ஆதரவாளர்கள்

பாட்னா

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதே சுயேட்சை வேட்பாளர் நாராயண்சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை நாராயண்சிங் ஆதரவாளர்கள் அடித்தே கொலை செய்தனர். இந்த சம்பவங்களால் பீகார் தேர்தல் களத்தில் பதற்றம் நிலவுகிறது.

பீகாரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் வரும் 28-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் பீகார் தேர்தல் களத்தில் பிரசாரம் அனல் பறக்கிறது. பொதுவாக வன்முறைகள் இல்லாமல்தான் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமையன்று சியோஹர் தொகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சுயேட்சை வேட்பாளர் நாராயண்சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது ஆதரவாளர்கள் 2 பேரில் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் நாராயண்சிங்கை சுட்டுக் கொன்ற கொலையாளியை சுற்றி வளைத்து பிடித்த ஆதரவாளர்கள் அந்த நபரை அடித்தே கொலை செய்தனர். இச்சம்பவத்தில் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்று வரும் அபய்குமார் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் நாராயண்சிங்கை நோக்கி சரமாரியாக சுட்டது. அவரை காப்பாற்ற முயன்றோம். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்றார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments