Tuesday, March 21, 2023
Home பொது மதுரை மாவட்டம் - 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு நடத்தப்பட்ட பிரியாணி திருவிழா

மதுரை மாவட்டம் – 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு நடத்தப்பட்ட பிரியாணி திருவிழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோயிலில் 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு பிரியாணி திருவிழா நடத்தப்பட்டுள்ளது.

டி.அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் சடச்சி அம்மன் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் 20 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி கிடாய்கள் வெட்டி பலியிட்டு அம்மனுக்கு படையலிட்டு கொண்டாடுவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொங்கல் வைக்கப்படுவது தடை செய்யப்பட்டு, எளிமையாக விழா நடத்தப்பட்டது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகள் நேற்று நள்ளிரவு அம்மனுக்கு பலியிடப்பட்டது. பின்னர் 1500 கிலோ அரிசியுடன் இறைச்சியை கலந்து பிரியாணி தயார் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் வாளிகளில் வைத்து வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்பட்டது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments