Sunday, March 26, 2023
Home தமிழகம் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று இரவு 11.15 மணி அளவில் காலமானார்.

முதலமைச்சர் பழனிசாமி தாயார் மறைவையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக, அக்டோபர் 13 அன்று வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே, உடனடியாக அவர் விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்துவரப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவை காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சைகள் தரப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆகவே, அதற்கும் சேர்த்து மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டன.

அப்போது அமைச்சர் துரைக்கண்ணுவிடம் வீடியோ கால் வழியாகப் பேசி நலம் விசாரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சருக்குத் தரப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் பேசினார். இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைக் கொண்ட அமைச்சர் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90 சதவிகிதம் அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னது மருத்துவ மனை நிர்வாகம். பிறகு அவருக்கு எக்மோ சிகிச்சை தரப்பட்டது. ஆனால் அந்த சிகிச்சைகள் பலனளிக்காமல் நேற்று அக்டோபர் 31 இரவு 11.15 மணியளவில் மரணமடைந்தார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments