Wednesday, March 22, 2023
Home உலகம் காபூல் பல்கலைக்கழகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - மாணவர்கள் உள்பட 19 பேர் உயிரிழப்பு

காபூல் பல்கலைக்கழகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – மாணவர்கள் உள்பட 19 பேர் உயிரிழப்பு

காபூல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மாணவர்கள் உள்பட 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காபூல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மாலை திடீரென புகுந்த 3 தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குலை நடத்தியிருக்கிறார்கள். இதில் 19 பேர் உடல் சிதறி பலியாகினர், 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

முன்னதாக ஒருவர் மனித வெடிகுண்டை வெடித்த நிலையில் மற்ற இரணடு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சண்டை போட்டு சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என்று தாலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. எந்த அமைப்பும் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக அக்., 24 ல் காபூலில் உள்ள ஒரு கல்வி மையத்தில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் மாணவர்கள் உள்பட 24 பேர் பலியாகினர். இப்போது நடத்திருப்பது இரண்டாவது சம்பவம் ஆகும்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments