Monday, October 2, 2023
Home தமிழகம் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை

தமிழக பா.ஜ.க சார்பில் நாளை (நவ. 6) நடத்த உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தமிழக பா.ஜ.க சார்பில் திருத்தணி துவங்கி திருச்செந்தூர் வரை நாளை முதல் டிச.,6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் அறிவித்துள்ளார். இதற்கு தடை கோரி செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

மனுக்களில் வைரஸ் தொற்று காரணமாக மத நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தும் போது பொது மக்கள் அதிகம் பேர் கூடுவர். அதனால் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு எடுத்து வரும் முயற்சிகளும் வீணாகும்’ என கூறப்பட்டிருந்தது.

வேல் யாத்திரைக்கு தடைக்கோரும் இம்மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வில் இன்று (நவ.5) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடுகையில், வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு திருவள்ளூரில் அளிக்கப்பட்ட மனுவில் எத்தனை பேர் பங்கேற்பர் என குறிப்பிடவில்லை. மேலும், கொரோனாவுக்கான 2, 3வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல்யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது, என பதிலளித்துள்ளார். இதனையடுத்து வேல் யாத்திரைக்கு காவல்துறையும் அனுமதி மறுத்துள்ளது.

இதற்கு பாஜ., தரப்பில் பதிலளிக்கையில், ‘பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் வேல் யாத்திரையை தடுப்பது சரியல்ல. கொரோனா தொற்று குறைந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேல் யாத்திரையின் போது எந்த பகுதியிலும் தங்கும் திட்டமில்லை. குறிப்பிட்ட எந்த பகுதியும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை. மேலும், தனிமனித இடைவெளியை பின்பற்றவே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. என விளக்கமளித்தது.

பின்னர், வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என பாஜ.க விடம் தெரிவிக்கப்படும், என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, வேல் யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்குப் பின் வழக்கு தொடரலாம், எனக்கூறி 2 வழக்குகளையும் உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments