Tuesday, March 21, 2023
Home இந்தியா புதுச்சேரியில் ஒரே வருடத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்பை ஏற்படுத்தித் தருவோம் - குமரி...

புதுச்சேரியில் ஒரே வருடத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்பை ஏற்படுத்தித் தருவோம் – குமரி நம்பி, தேசிய துணைத்தலைவர், சமதா கட்சி.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில சமதா கட்சியின் நிர்வாக குழு கூட்டம் உழவர்கரையில் நடைபெற்றது.

புதுச்சேரி சமதா கட்சி மாநிலத் தலைவர் தினகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர்கள் ராஜகுரு, ஆன்றூஸ், மாநில துணைத்தலைவர் முருகன் இராமசாமி, பொருளாளர் செயின்ட் பால் ஆகியோர் முதன்மை வகித்தனர்.

இதில் அகில இந்திய துணைத் தலைவர் குமரி நம்பி, அகில இந்திய பொதுச் செயாலாளர் என்.ஏ.கோன் மற்றும் சமதா கட்சியின் தமிழ்நாடு முதன்மை பொதுச் செயலாளர் ஜவஹர் ஆனந்த், தமிழ் நாடு விவசாய அணி மாநிலத் தலைவர் செல்வ. வீரத்தமிழன், தமிழ்நாடு பொதுச் செயலாளர் இரா.கார்த்திக், மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் அனைத்து 30 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்பது அறிவிக்கப்பட்டது.

சமதா கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் குமரி நம்பி கூறியதாவது:

புதுச்சேரி முதலமைச்சரும், ஆளுநரும் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். அவர்கள் இருவரும் அரசு நிர்வாகத்துக்குள் அரசியல் செய்கிறார்கள். இதனால் புதுச்சேரி மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் அனைத்தும் தடைபடுகிறது. ஏற்கெனவே 4 ஆயிரம் பேர் வேலை இழந்து நிற்கும் நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 5 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்போம் என்று பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். அனால் சமதா கட்சியால் ஒரே வருடத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க முடியும்.

பனை மரத்தின் மூலமாகவே நாங்கள் இந்த வேலைவாய்ப்பை வழங்குவோம். புதுச்சேரி அரசுக்கு தேவைப்பட்டால் எங்கள் ஆலோசனையை வழங்க தயார் என்று கூறினார் குமரி நம்பி.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments