Friday, September 29, 2023
Home தமிழகம் "நிவர்" புயல் நிலவரம்

“நிவர்” புயல் நிலவரம்

நிவர் புயலானது தீவிர புயலாக மாறி கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 300கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கும் கிழக்கு-தென்கிழக்கே 310 கிமீ தொலைவிலும், சென்னை க்கு தென்கிழக்கே 370 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.இப்புயல் கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்துள்ளது.

நிவர் இன்று மாலைக்குள் #மிக_தீவிர_புயலாக மாறி வடக்கு திசையில் நகர்ந்தி சென்னைக்கும் – புதுச்சேரிக்கும் இடையே மரக்காணம்/மகாபலிபுரம் அருகே இன்று பின்இரவு கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இப்புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கிமீ வரை பலத்த சூறைக்காற்று வீசும், புயலின் மையப்பகுதியில் காற்றின் வேகம் 160கிமீ வரை செல்லலாம்.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், புதுச்சேரி,செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை மாவட்டங்களில் அதித கனமழையும், பலத்த சூறைக்காற்றும் விசும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் பகுதிகளான புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு,சென்னை ஆகிய மாவட்டங்களில் புயலின் அதிகபட்ச காற்றின் வேகமும், மழையும் பெய்யும் என்பதால் வடகோடி மாவட்ட மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வடகடலோர மாவட்டங்கள் மழையும், சூறைக்காற்றும் படிப்படியாக அதிகரிக்கும், அனைத்து இடங்களிலும் நாளை அதிகாலை வரை மிககனமழை முதல் அதித கனமழையும், பலத்த சூறைக்காற்றும் தொடர்ந்து வீசும்.

தாழ்வான பகுதியில், பாதுகாப்பில்லாத இடங்களில் வசிப்போர் முன்னெச்சரிக்கையாக பாதுக்காப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டெல்டா பகுதிகள் #நாகப்பட்டினம், #காரைக்கால் #மயிலாடுதுறை மாவட்டங்களில் காற்று அச்சம் தேவையில்லை, தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று இரவு வரை டெல்டாவில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான காற்றுடன் ( கண்டிப்பாக எந்த பாதிப்பும் ஏற்படாது) கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காலை 10 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வானிலை அறிக்கை வெளியிடப்படும்.

இணைந்திருங்கள், எச்சரிக்கையாக இருங்கள்!

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments