Friday, September 29, 2023
Home இந்தியா மத்திய பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சி - டெல்லியில் கடும் குளிரில் 5வது நாளாக விவசாயிகள்...

மத்திய பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சி – டெல்லியில் கடும் குளிரில் 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்

டெல்லி

மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சி டெல்லியில் 5-வது நாளாக இன்றும் தொடருகிறது.

மத்திய பாஜக அரசு அண்மையில் 3 புதிய விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட்டுகளுக்கானது என்பது குற்றச்சாட்டு.

ஆகையால் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக டெல்லி சலோ போராட்டம் அறிவிக்கப்பட்டது.

டெல்லியை நோக்கி டிராக்டர்களிலும் நடைபயணமாகவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப், ஹரியானாவில் இருந்து புறப்பட்டனர். டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறாத வகையில் தடுப்புகளை ஹரியானா அரசு அமைத்திருந்தது. இந்த தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லியை நோக்கி விரைந்தனர் விவசாயிகள்.

விவசாயிகளை தடுக்கும் வகையில் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் பார்த்தனர். ஆனால் போலீசாரின் அடக்குமுறைகளை மீறி டெல்லி புராரி பகுதிக்குள் விவசாயிகள் நுழைந்தனர். டெல்லி புராரி மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டனர். இந்த போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.

டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலைகளிலேயே படுத்துறங்கி போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்தனர். இன்று 5-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடருகிறது. விவசாயிகளின் இந்த பேரெழுச்சியால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments