Friday, September 29, 2023
Home தமிழகம் நெருங்கும் புரெவி புயல் - வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி

நெருங்கும் புரெவி புயல் – வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி

புரெவி புயல் எதிரொலியாக சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு செல்லும் சாலைகள் பேரிகார்டு கொண்டு மூடப்பட்டது. இதனால் கன்னியாகுமரியே வெறிச்சோடி காணப்படுகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரிக்கு 20 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு செல்லும் சாலைகள் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டு, இங்குவரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனால் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments