Wednesday, March 29, 2023
Home தமிழகம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய புரெவி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய புரெவி

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து, ராமநாதபுரத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து, நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

இதையடுத்து, தென்மேற்கு திசையில் நகர்ந்த அந்த காற்றழுத்த தாழ்வு இராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலைக்குள் கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கே நிலை கொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என கூறப்படுகிறது.

அந்த சூழலில், நாமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, படிப்படியாக காற்றின் வேகம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், புரெவி புயல் வலுவிழந்தாலும், தமிழகம்- புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,
சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் எனவும், சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments