Friday, December 1, 2023
Home தமிழகம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய புரெவி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய புரெவி

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து, ராமநாதபுரத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து, நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

இதையடுத்து, தென்மேற்கு திசையில் நகர்ந்த அந்த காற்றழுத்த தாழ்வு இராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலைக்குள் கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கே நிலை கொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என கூறப்படுகிறது.

அந்த சூழலில், நாமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, படிப்படியாக காற்றின் வேகம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், புரெவி புயல் வலுவிழந்தாலும், தமிழகம்- புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,
சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் எனவும், சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments