Saturday, March 25, 2023
Home இந்தியா கலவரங்களைத் தூண்ட சட்டவிரோதமான பணம் பெற்றதா பி.எப்.ஐ கட்சி ? 26 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

கலவரங்களைத் தூண்ட சட்டவிரோதமான பணம் பெற்றதா பி.எப்.ஐ கட்சி ? 26 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத்துறையினர் பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் 26 இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

சென்னை, மதுரை, தென்காசி, பெங்களூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மலப்புரம் உள்ளிட்ட நகரங்களில் அமலாக்கததுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் தலைமையகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையின்போது அக்கட்சியின் வங்கிக் கணக்குகள், பணப்பரிமாற்றங்கள் சோதனையிடப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சிஏஏ வுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைத் தூண்ட மிகப்பெரிய தொகை இக்கட்சியினருக்கு கை மாறியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

பி.எப்.ஐ கட்சியின் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 120 கோடி ரூபாயில் 50 கோடிக்கும் மேல் பணம் வெளிநாட்டில் இருந்து வந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டெல்லியின் ஷகீன் பாக்கில் வன்முறை வெடித்தபோதும் இந்த கட்சிக்கு இருந்து பணம் வந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments