Saturday, May 27, 2023
Home பொது ஊட்டி மலை ரயில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது - ஒரு நபருக்கு கட்டணம் ரூ.3000

ஊட்டி மலை ரயில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது – ஒரு நபருக்கு கட்டணம் ரூ.3000

நீலகிரி எக்ஸ்பிரஸ் என பெயர்சூட்டப்பட்டுள்ள ஊட்டி மலை ரயில் (1908 ) நூற்றாண்டு கடந்த ஓர் வரலாற்று நினைவுச் சின்னமாக உள்ளது.

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது தெற்கு ரயில்வே. இப்போது அந்த ரயிலின் பெயர் TN43. இந்த ரயிலுக்கு காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது. ஒரு முறை சென்று வர ரயில்வேக்கு வாடகை தொகையாக ரூ.5 லட்சம் செலுத்துகிறது குத்தகைக்கு எடுத்த தனியார் நிறுவனம்.

இந்த ஊட்டி ரயில் பெட்டி ஒவ்வொன்றிலும் விமான பணிப்பெண் போல ஒரு இளம் வயது பணிப்பெண்ணை நியமித்து இருக்கிறார்கள். இரண்டு ஸ்நாக்ஸ் பொட்டலம், ஒரு தண்ணீர் பாட்டில் இலவசம். அரசு ரயில்வேயின் பழைய கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.30, தனியார் ரயிலின் புதிய கட்டணம் ரூ.3000.

இந்த கட்டணம் ஏப்ரல் முதல் ஜூலை வரை தேவையை பொறுத்து ரூ.8000 முதல் ரூ.12,000 வரை இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஸ்டேஷன் வாசலிலும் ஒரு தனியார் டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.

ஊட்டி ரயில் இனி கனவுதான். தனியார் ரயில்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ஆனது அல்ல என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments