Sunday, November 26, 2023
Home பொது ஊட்டி மலை ரயில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது - ஒரு நபருக்கு கட்டணம் ரூ.3000

ஊட்டி மலை ரயில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது – ஒரு நபருக்கு கட்டணம் ரூ.3000

நீலகிரி எக்ஸ்பிரஸ் என பெயர்சூட்டப்பட்டுள்ள ஊட்டி மலை ரயில் (1908 ) நூற்றாண்டு கடந்த ஓர் வரலாற்று நினைவுச் சின்னமாக உள்ளது.

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது தெற்கு ரயில்வே. இப்போது அந்த ரயிலின் பெயர் TN43. இந்த ரயிலுக்கு காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது. ஒரு முறை சென்று வர ரயில்வேக்கு வாடகை தொகையாக ரூ.5 லட்சம் செலுத்துகிறது குத்தகைக்கு எடுத்த தனியார் நிறுவனம்.

இந்த ஊட்டி ரயில் பெட்டி ஒவ்வொன்றிலும் விமான பணிப்பெண் போல ஒரு இளம் வயது பணிப்பெண்ணை நியமித்து இருக்கிறார்கள். இரண்டு ஸ்நாக்ஸ் பொட்டலம், ஒரு தண்ணீர் பாட்டில் இலவசம். அரசு ரயில்வேயின் பழைய கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.30, தனியார் ரயிலின் புதிய கட்டணம் ரூ.3000.

இந்த கட்டணம் ஏப்ரல் முதல் ஜூலை வரை தேவையை பொறுத்து ரூ.8000 முதல் ரூ.12,000 வரை இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஸ்டேஷன் வாசலிலும் ஒரு தனியார் டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.

ஊட்டி ரயில் இனி கனவுதான். தனியார் ரயில்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ஆனது அல்ல என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments