Tuesday, November 28, 2023
Home இந்தியா இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள அதி நவீன 17-ஏ பிரிகேட் போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள அதி நவீன 17-ஏ பிரிகேட் போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதலாவது நவீன 17-ஏ பிரிகேட்ஸ் ஏவுகணை தாங்கி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த கப்பலை, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், முப்படை தலைமை தளபதியின் துணைவியார் மதுலிகா ராவத் துவக்கி வைத்தார்.

19 ஆயிரத்து 293 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 3 பிரிகேட் கப்பல்களை கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.நவீன எஞ்சின் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல் மணிக்கு 28 கிலோநாட் வேகத்தில் பயணிக்கும்.
வான், கடல் மற்றும் ஆழ்கடலில் இருந்து வரும் முக்கோண அச்சுறுத்தல்களை சமாளிக்க திறன் வாய்ந்த ஆயுதங்களும், சென்சர்களும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,இனி வரவுள்ள மேலும் 2 பிரிகேட் கப்பல்களும் சேர்ந்து கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவுக்கு தன்னிறைவை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments