Wednesday, March 29, 2023
Home இந்தியா இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள அதி நவீன 17-ஏ பிரிகேட் போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள அதி நவீன 17-ஏ பிரிகேட் போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதலாவது நவீன 17-ஏ பிரிகேட்ஸ் ஏவுகணை தாங்கி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த கப்பலை, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், முப்படை தலைமை தளபதியின் துணைவியார் மதுலிகா ராவத் துவக்கி வைத்தார்.

19 ஆயிரத்து 293 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 3 பிரிகேட் கப்பல்களை கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.நவீன எஞ்சின் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல் மணிக்கு 28 கிலோநாட் வேகத்தில் பயணிக்கும்.
வான், கடல் மற்றும் ஆழ்கடலில் இருந்து வரும் முக்கோண அச்சுறுத்தல்களை சமாளிக்க திறன் வாய்ந்த ஆயுதங்களும், சென்சர்களும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,இனி வரவுள்ள மேலும் 2 பிரிகேட் கப்பல்களும் சேர்ந்து கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவுக்கு தன்னிறைவை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments