Saturday, March 25, 2023
Home வர்த்தகம் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் வட்டி கேட்டு வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டல் விடுத்த தனியார்...

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் வட்டி கேட்டு வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டல் விடுத்த தனியார் வங்கி

திருவொற்றியூர் அடுத்த மணலி மாத்தூர் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்த சுகுமாரன் வயது 45, திருமண அழைப்பிதழ் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2011ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1.70 லட்சம தனிநபர் கடன் பெற்றுள்ளார். இதற்கான மாதத்தவணையாக ரூ.5,800 செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கால் வருவாயின்றி மாதத்தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, கடந்த 2 மாதங்களாக தவணை தொகையை செலுத்தி உள்ளார். விடுபட்ட தொகையை கூடுதல் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகம் சுகுமாரனிடம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் வட்டி வசூலிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, கூடுதல் வட்டியை செலுத்த முடியாது, என சுகுமாரன் கூறியுள்ளார். இதை ஏற்காத வங்கி நிர்வாகம், சுகுமாரனுக்கு அடிக்கடி போன் செய்து கூடுதல் வட்டியுடன் தவணை தொகையை செலுத்தும்படி கூறியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சுகுமாரன் மற்றும் அவரது மனைவி இருவரும் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் இவர்களது 2 மகன்கள் மட்டும் தனியே இருந்துள்ளனர். அப்போது, சம்பந்தப்பட்ட வங்கியின் கலெக்சன் ஏஜென்சி நபர்கள் அடியாட்களுடன் சுகுமாரனின் வீட்டுக்கு வந்து, அவரது மகன்கள் இருவரிடமும் வட்டி தொகையை செலுத்த வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.இதனால் பயந்து போன மகன்கள் அழுதுள்ளனர். சிறிது நேரம் அங்கே இருந்த ஏஜென்சி அடியாட்கள் பின்னர் அங்கிருந்தபடி சுகுமாரனுக்கு போன் செய்து கடனை கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சுகுமாரன் இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை செய்து வருகின்றனர். தனியார் வங்கிகள் 6 மாதம் வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் அளிக்கலாம். மேலும் கூடுதல் வட்டி வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி மற்றும் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதை ஏற்காத சில தனியார் வங்கிகள் இதுபோல் விடுபட்ட கடன் தொகையையும் கூடுதல் வட்டியையும் கேட்டு வாடிக்கையாளர்களை துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments