Wednesday, March 29, 2023
Home சினிமா நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க தயார் - உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ பதில்

நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க தயார் – உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ பதில்

சென்னை

நிபந்தனைகளுடன் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு பகுதியை இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய இசையமைப்புக்காகப் பயன்படுத்தி வந்தார். 2019-ல் இதனை காலி செய்ய வேண்டும் என்று இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

இது தொடர்பாக இருதரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ50 லட்சம் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் விசாரித்து வருகிறார்.

இவ்வழக்கில் இளையராஜாவை ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்க முடியுமா? என பிரசாத் ஸ்டுடியோ பதிலளிக்க நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரசாத் ஸ்டுடியோ, இளையராஜாவை அனுமதிக்க முடியாது, அவரது பிரதிநிதிகள் வந்து இளையராஜாவின் பொருட்களை எடுத்து செல்லலாம் என கூறியது.

பின்னர், இளையராஜாவின் பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமிப்பதாகவும் அவருடன் இளையராஜா, உதவியாளர் செல்லலாம் என நீதிபதி சதீஷ்குமார் யோசனை தெரிவித்தார். இந்த யோசனை தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று இருதரப்புக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிரசாத் ஸ்டுடியோ தரப்பு 30 நிமிடத்தில் பதில் தருவதற்கு கெடு விதித்தார் நீதிபதி சதீஷ்குமார்.

இதனையடுத்து, நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க தயார்; அவருடன் உதவியாளர், வழக்கறிஞர் வந்து பொருட்களை எடுத்து செல்லலாம் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நிபந்தனைகளை ஏற்று இன்று மாலைக்குள் பதில் அளிப்பதாக இளையராஜா தரப்பு கூறியது. இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி சதீஷ்குமார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments