Saturday, March 25, 2023
Home வர்த்தகம் காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை மற்றவர்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் -...

காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை மற்றவர்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் – உயர் நீதிமன்றம்

சென்னை

காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை மற்றொரு நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காளீஸ்வரி நிறுவனத்தின் டிரேட் மார்க் முத்திரையை போலியாக வரைந்து மற்ற நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹேமா புட்ஸ் நிறுவனம் நந்தி தீபம் ஆயில் என்ற பெயரில் விளக்கேற்றும் எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. தீபம் என்ற பெயர் எங்களின் காப்புரிமை. அதை ஹேமா புட்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பு எண்ணெயை விற்பனை செய்ய பயன்படுத்தக் கூடாது. அதுமட்டுமல்லாமல் தீபம் ஆயில் பாட்டிலின் வடிவம், முத்திரை ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். எனவே, தீபம் ஆயில் என்ற பெயரை ஹேமா புட்ஸ் நிறுவனம் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹேமா புட்ஸ் நிறுவனம் தீபம் ஆயில் என்ற பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை நீக்க கோரி ஹேமா புட்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதில், தீபம் என்பது பொதுவானதாகும். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு எண்ணெய் நந்தி தீபம் என்று தான் உள்ளது. எனவே, நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. காளீஸ்வரி நிறுவனம் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி தடையை நீக்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதி, தடை தொடரும் என்று உத்தரவிட்டார். ‌‌

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments