Wednesday, June 7, 2023
Home இந்தியா விவசாயிகள் போராட்டம் - சட்டங்களை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு

விவசாயிகள் போராட்டம் – சட்டங்களை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு

டெல்லியில் 35ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளில் முக்கியமானதாக கருதப்படும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்பதில் இந்திய அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆறாம் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தினர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7.30 மணிவரை நீடித்தது.

இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “விவசாயிகள் முன்வைத்த 4 பிரச்னைகளில் 2க்கு கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று ஆரம்பம் முதலே அரசு தொடர்ந்து பேசி வருகிறது என்று கூறிய அவர், அந்த விலை நிர்ணய கொள்கைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து தேவை என விவசாயிகள் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக விவாதிக்க அரசு தொடர்ந்து தயாராக உள்ளது என்பதால் வரும் ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடி பேச தீர்மானித்துள்ளோம் என்று அமைச்சர் தோமர் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments