Friday, September 29, 2023
Home தமிழகம் புதுவையில் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க திட்டம்

புதுவையில் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க திட்டம்

முதலமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது இலவச அரிசிக்கான பணம் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி சிவப்பு நிற ரே‌‌ஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை 5 மாதத்திற்கான அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கார்டு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் பிப்ரவரி மாத நிலுவை தொகையான ரூ.400 ஆகியவற்றை சேர்த்து தலா ரூ.3 ஆயிரத்து 400 வழங்கவும், மஞ்சள் நிற கார்டுதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் நவம்பர் வரை 4 மாதத்திற்கு கார்டு ஒன்றுக்கு ரூ.1,200, மே மாத நிலுவைத் தொகை ரூ.100 சேர்த்து கார்டு ஒன்றுக்கு ரூ.1,300 வழங்குவதற்கு மொத்தம் ரூ.79 கோடியே 46 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்து கவர்னர் கிரண்பேடிக்கு டிசம்பர் 2-ந் தேதி அனுப்பப்பட்டது.

இதில் சிவப்பு நிற கார்டு தாரர்களுக்கு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம், மஞ்சள் நிற கார்டு தாரர்களுக்கு ரூ.ஆயிரமும் வழங்க ரூ.53 கோடியே 88 லட்சத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

மஞ்சள் நிற கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.ஆயிரம் வழங்குவதற்கான ஒப்புதலின் போது கவர்னர் விதித்த சில தேவையற்ற நிபந்தனைகள் காரணமாக அரிசிக்கான பணம் பயனாளிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையால் இதுவரை வழங்கப்பட இயலவில்லை.

எனவே மஞ்சள் நிற கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.ஆயிரம் உடனடியாக வழங்கவேண்டும் என்று குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு துறை அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டார்.

அதன்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே புதுச்சேரி மாநில அரசின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டும், கவர்னரின் நடவடிக்கைகளையும் பரிசீலித்து ரேஷன்கார்டுக்கு தலா ரூ.1,000 வீதம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று கோப்பு தயார் செய்து துறையின் அமைச்சர் கந்தசாமி பரிந்துரையின் பேரில் தலைமை செயலர் அஸ்வனிகுமார் சார்பில் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments