Friday, September 29, 2023
Home உலகம் ரஷியாவுடனான இந்தியாவின் "எஸ்400" ஒப்பந்தம் பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் - அமெரிக்க நாடாளுமன்றம் எச்சரிக்கை

ரஷியாவுடனான இந்தியாவின் “எஸ்400” ஒப்பந்தம் பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் – அமெரிக்க நாடாளுமன்றம் எச்சரிக்கை

வா‌ஷிங்டன்:

தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்றது ர‌ஷியாவின் “எஸ்400” ஏவுகணை தடுப்பு அமைப்பு. இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ர‌ஷியாவிடம் இருந்து 5 “எஸ்400” ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க 5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36 ஆயிரத்து 617 கோடி) அளவில் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியது.

ஆனால் அதை மீறியும் இந்தியா கடந்த ஆண்டு “எஸ்400” ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க முதற்கட்டமாக 800 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.5,843 கோடி) ர‌ஷியாவிடம் வழங்கியது.

இந்தநிலையில் ர‌ஷியாவிடம் “எஸ்400” ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என அமெரிக்க நாடாளுமன்றம் எச்சரித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி பிரிவான நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதில், இந்தியா அதிக தொழில்நுட்ப பகிர்வு மற்றும் இணை உற்பத்தி முயற்சிகளுக்கு ஆர்வமாக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் அதிக சீர்திருத்தங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு துறையில் அதிக அந்நிய நேரடி முதலீட்டு இடைவெளிகளை அமெரிக்கா வலியுறுத்துகிறது. ர‌ஷியா தயாரித்த “எஸ்400” ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்குவதற்கான இந்தியாவின் பல பில்லியன் டாலர் ஒப்பந்தம் அமெரிக்க பொருளாதார தடை சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments