Tuesday, October 3, 2023
Home இந்தியா ராஜஸ்தான், கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியபிரதேசத்தில் பறவைக் காய்ச்சல்

ராஜஸ்தான், கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியபிரதேசத்தில் பறவைக் காய்ச்சல்

இமாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

இமாச்சலப் பிரதேசத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த பறவைகள் உயிரிழந்ததற்கு பறவைக் காய்ச்சலே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இதுவரை உயிரிழந்த 2400 பறவைகளில், பெரும்பாலானவை பட்டை தலை வாத்துகளாகும்.

பாங் அணைப்பகுதியில் இருந்து இறந்த 5 வாத்துகளின் உடல்கள் எடுக்கப்பட்டு, போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், எச்5-என்1 என்ற ஏவியன் இன்புளுயன்சா வைரஸ் தாக்கியதால் தான் பறவைகள் உயிரிழந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கடந்த சில வாரங்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாத்துக்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இதனால் அங்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

எனவே ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் இரு மாவட்டங்களிலும் 36 ஆயிரம் வாத்துக்களை கொல்ல அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் 170 க்கும் மேற்பட்ட பறவைகள் எச்5-என்1 நோயால் உயிரிழந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து நேற்று 425க்கும் அதிமான பறவைகள் இறந்ததால் அங்கும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளதாக ராஜஸ்தான் மாநில கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கால்நடை வளர்ப்போர் எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில அரசு தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பறவைக் காய்ச்சல் உறுதியானதைத் தொடர்ந்து பறவைகள் மற்றும் விலங்குகளின் உயிரிழப்பு குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநில அரசு கூறியுள்ளது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments