Friday, September 29, 2023
Home Uncategorized 410 நாடுகளின் கரன்சி நோட்டுகளை சேகரித்து சென்னையை சேர்ந்த இளைஞர் உலக சாதனை

410 நாடுகளின் கரன்சி நோட்டுகளை சேகரித்து சென்னையை சேர்ந்த இளைஞர் உலக சாதனை

சென்னையை சேர்ந்தவர் அண்ணாமலை ராஜேந்திரன், 34, இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் கரன்சி தாள்களை சேகரித்து வந்துள்ளார். இதனை இன்று சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஹோட்டலில் காட்சிக்கு வைத்திருந்தார். அதில், 189 ஐ.நா. உறுப்பினர் நாடுகள், 27 தீவு மற்றும் வெளிநாட்டு பிரதேசங்கள் மற்றும் தற்போது இல்லாத அதாவது இரண்டாம் உலக போருக்கு பிறகு ஒன்றிணைக்கப்பட்ட நாடுகள் என 194 வழக்கற்றுப்போன நாடுகளை உள்ளடக்கிய 410 நாடுகளின் பணத்தாள்களை அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

17 ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரை உள்ள காகிதம், பாலிமர், அட்டை, தங்கம் மற்றும் துணி போன்ற பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட கரன்சி நோட்டுக்கள் அடங்கும்.

இதற்கு முன்பு மதுரையை சேர்ந்த
ஜெயேஷ் குமார் பாண்டியன் செய்த, 191 இருக்கும் ஐ.நா. நாடுகள், 161 வழக்கற்றதாக நாடுகள் மற்றும் 26 தீவு மற்றும் வெளிநாட்டு நிலப்பகுதிகள் உட்பட 378 வெவ்வேறு நாடுகளில் இருந்து நாணயங்கள் கொண்டிருந்தது சாதனையாக இருந்தது, இதனை தற்போது அண்ணாமலை முறியடித்துள்ளாதக ஆசிய புக் ஆப் ரெகார்ட்ஸ்-ன் நடுவர் விவேக் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments