Thursday, December 7, 2023
Home இந்தியா டெல்லியில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 52 பேருக்கு இலேசான ஒவ்வாமை

டெல்லியில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 52 பேருக்கு இலேசான ஒவ்வாமை

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 52 பேருக்கு இலேசான ஒவ்வாமை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

டெல்லியில் முதல் நாளில் 81 மையங்களில் மருத்துவப் பணியாளர்கள் நாலாயிரத்து 319 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இவர்களில் 52 பேருக்கு மட்டும் தடுப்பு மருந்தால் இலேசான ஒவ்வாமை ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

வடக்கு டெல்லி மாநகராட்சி மருத்துவமனையில் 43 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் இருவருக்கு மட்டும் இலேசாக நெஞ்சு இறுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அரைமணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர் குணமடைந்து விடுவிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் குறைந்தது ஒரு லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும், ஒவ்வாமையால் ஒருவர் கூட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தகவல் வரவில்லை என்றும் மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments