Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாடெல்லியில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 52 பேருக்கு இலேசான ஒவ்வாமை

டெல்லியில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 52 பேருக்கு இலேசான ஒவ்வாமை

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 52 பேருக்கு இலேசான ஒவ்வாமை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

டெல்லியில் முதல் நாளில் 81 மையங்களில் மருத்துவப் பணியாளர்கள் நாலாயிரத்து 319 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இவர்களில் 52 பேருக்கு மட்டும் தடுப்பு மருந்தால் இலேசான ஒவ்வாமை ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

வடக்கு டெல்லி மாநகராட்சி மருத்துவமனையில் 43 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் இருவருக்கு மட்டும் இலேசாக நெஞ்சு இறுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அரைமணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர் குணமடைந்து விடுவிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் குறைந்தது ஒரு லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும், ஒவ்வாமையால் ஒருவர் கூட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தகவல் வரவில்லை என்றும் மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments