Friday, December 1, 2023
Home வர்த்தகம் மூன்றே நாள்களில் 2.5 கோடி டவுன்லோடு - "சிக்னல்" செயலியின் கிடுகிடு வளர்ச்சி

மூன்றே நாள்களில் 2.5 கோடி டவுன்லோடு – “சிக்னல்” செயலியின் கிடுகிடு வளர்ச்சி

கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் மட்டும் இந்தியாவில் 24.6 மில்லியன் பயனர்கள் சிக்னல் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். உலகளவில் வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய பயனர் தளமாக இந்தியா இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது ‘பிரைவசி பாலிசி’ எனப்படும் புதிய தனியுரிமை கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது.

இதன்படி தன் பயனாளிகள் குறித்த தகவல்களை சேகரித்து, ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கூறி, புதிய தனியுரிமை கொள்கையை வாட்ஸ்அப் வெளியிட்டது. இந்த புதிய கொள்கையை பிப்ரவரி 8ம் தேதிக்குள் வாட்ஸ்அப் பயனாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் இல்லையெனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது.

இந்த புதிய தனியுரிமை கொள்கை பயனர்கள் மத்தியில் அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியதை தொடர்ந்து, வாட்ஸ்அப் பயனர்கள் ‘சிக்னல்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட வேறு செயலிகளுக்கு மாறத்தொடங்கியனர். இதையடுத்து தங்களது புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்துவதை தள்ளி வைப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்தது.

எனினும், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக, “சிக்னல்”, “டெலிகிராம்” செயலிகளை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் மட்டும் இந்தியாவில் 24.6 மில்லியன் பயனர்கள் சிக்னல் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளதாக சமூக ஊடக தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் வாட்ஸ்அப் பயனர்களில் 36 சதவீதத்தினர், வாட்ஸ்அப் பயன்படுத்துவதை வெகுவாகக் குறைத்துள்ளனர் எனவும் 15 சதவீத பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்களில் 24 சதவீதம் பேர் ‘சிக்னல்’ மற்றும் ‘டெலிகிராம்’ போன்ற பிற மாற்று செயலிகளுக்கு மாறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் ஜனவரி 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையில், வாட்ஸ்அப் அதன் பதிவிறக்கங்களில் 35 சதவீதம் குறைந்துள்ளதாகவும் லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வு கூறுகிறது.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments