Wednesday, June 7, 2023
Home வர்த்தகம் ரிலையன்ஸ் 3 நாளில் ரூ 1.4 லட்சம் கோடி இழப்பு

ரிலையன்ஸ் 3 நாளில் ரூ 1.4 லட்சம் கோடி இழப்பு

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், புதன்கிழமை வர்த்தகத்தில் 2 சதவீதம் சரிவைச் சந்தித்ததை அடுத்துச் சென்செக்ஸ் குறியீட்டில் தொடர்ந்து 2வது நாளாக மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சரிவைக் கண்டு அதிர்ச்சியில் இருக்கும் முதலீட்டாளர்களுக்குச் சர்வதேச முதலீட்டு வங்கியான Macquarie ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தத் தொடர் சரிவின் காரணமாக முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பு கடந்த 3 நாட்களில் சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 4 வர்த்தக நாட்களாகச் சரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச முதலீட்டு வங்கியான Macquarie நிறுவனத்தின் ஆதித்யா சுரேஷ் மற்றும் அபிநில் தஹிவாலே ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சரிவு பாதையின் துவக்கம் தான், இதை விடவும் பெரிய சரிவடையும் ஆபத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments