Friday, December 1, 2023
Home தமிழகம் சாத்தூர் பட்டாசு ஆலை கொடூர விபத்து 19 பேர் பலி

சாத்தூர் பட்டாசு ஆலை கொடூர விபத்து 19 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரில் 18 பேரின் அடையாளம் தெரிந்தது.

சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கிவந்தது. ஸ்ரீ மாரியம்மாள் என்ற பெயரில் இயங்கி வந்த அந்தப் பட்டாசு ஆலை அச்சங்குளத்தில் இயங்கி வருகிறது. இங்கு பேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று இந்த ஆலையில் வெடிப்பொருட்களுக்கு மருந்து நிரப்பும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து நடந்தது. இதில் ஓர் அறை வெடித்துச் சிதற அடுத்தடுத்து 6 அறைகளுக்கு தீ பரவி வெடித்துச் சிதறின.
இந்த கொடூர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 8 பேர் மருத்துவமனைகளில் இறந்தனர். உயிரிழந்த 19 பேரில் 18 பேரின் அடையாளம் தெரிந்தது.

அவர்களின் விவரம் பின்வருமாறு: சந்தியா (20) ஏழாயிரம்பண்ணை, கற்பகவள்ளி (22), நடுசூரன்குடி, நேசமணி (32), மேல புதூர், தங்கலட்சுமி (40), ஏழாயிரம்பண்ணை, பாக்கியராஜ் (45) நடுசூரன்குடி, கருப்பசாஅமி (57), நடுசூரன்குடி, பஞ்சவரணம் (57) படந்தை. இவர்கள் அனைவரின் உடல்களும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

கோபால் (30), படந்தை. இவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தேவசகாயம் (27) பணையடிப்பட்டி, காளியப்பன் (30) மார்க்கநாதபுரம் ஆகியோரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. வசந்தி (45) நடுசூரன்குடி, ப்ரூஸ்லி (40) அம்மர்பாளையம், கருப்பசாமி (28) படந்தை ஆகியோரின் சடலங்கள் சாத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ரவிச்சந்திரன் (58), சத்தரப்பட்டி, ஜீவா (36), மார்க்கநத்தபுரம், ரெங்கராஜ் (57) மேட்டுப்பட்டி, செல்வி (40), நடுசூரன்குடி, கண்ணன் (48), படந்தை, தனலட்சுமி (45), சாத்தூர், உஷா (35), சின்னகோலப்பட்டி, சங்கர நாராயணன் (60),படந்தை ஆகியோரின் உடல்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இவர்களைத் தவிர சிவகாசி அரசு மருத்துவமனையில் ஓர் ஆண் சடலம் அடையாளம் காணப்படாமல் உள்ளது.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments