Friday, September 29, 2023
Home தமிழகம் கிரண்பேடிக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது - நாராயணசாமி

கிரண்பேடிக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது – நாராயணசாமி

புதுச்சேரி

கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம். கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தை தீவிரப்படுத்தினோம்

புதுச்சேரி மாநில மக்களின் உரிமை காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றி புதுச்சேரி மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி

பல கட்டப்போராட்டங்களை நடத்திய பின்பு எங்களின் கோரிக்கை நியாயமானது என்று மோடி அரசு நினைத்து தற்போது மாற்றியுள்ளது.

புதிய துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் தமிழிசை அரசியலைமைப்பு சட்டப்படி நடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். யாராக இருந்தாலும் விதிகளையும் சட்டங்களையும் மீறக்கூடாது.

விதிமுறைகளை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு களங்கம் விளைவிக்க நினைத்த கிரண்பேடிக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது. இது மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி.

மதசாற்பற்ற கூட்டணி பலமான கூட்டணி வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும்.

புதுச்சேரியில் கிரண்பேடியை பாஜக முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தினால் வரவேற்பேன் என்று கூறியுள்ளார் நாராயணசாமி.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments