Saturday, March 25, 2023
Home தமிழகம் கிரண்பேடிக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது - நாராயணசாமி

கிரண்பேடிக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது – நாராயணசாமி

புதுச்சேரி

கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம். கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தை தீவிரப்படுத்தினோம்

புதுச்சேரி மாநில மக்களின் உரிமை காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றி புதுச்சேரி மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி

பல கட்டப்போராட்டங்களை நடத்திய பின்பு எங்களின் கோரிக்கை நியாயமானது என்று மோடி அரசு நினைத்து தற்போது மாற்றியுள்ளது.

புதிய துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் தமிழிசை அரசியலைமைப்பு சட்டப்படி நடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். யாராக இருந்தாலும் விதிகளையும் சட்டங்களையும் மீறக்கூடாது.

விதிமுறைகளை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு களங்கம் விளைவிக்க நினைத்த கிரண்பேடிக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது. இது மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி.

மதசாற்பற்ற கூட்டணி பலமான கூட்டணி வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும்.

புதுச்சேரியில் கிரண்பேடியை பாஜக முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தினால் வரவேற்பேன் என்று கூறியுள்ளார் நாராயணசாமி.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments