Saturday, March 25, 2023
Home தமிழகம் புதுச்சேரி - சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் சிவக்கொழுந்து

புதுச்சேரி – சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் சிவக்கொழுந்து

கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததது. அதையடுத்து, நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தது. அதனை தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து அனுப்பிய கோப்புகளின் அடிப்படையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதையடுத்து ஜனாதிபதி ஆட்சி புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார். அதேசமயம் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம் மற்றும் மகன் ரமேஷ் ஆகியோர் இன்று (28/02/2021) புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். மேலும் சில முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.எஸ். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments