Monday, October 2, 2023
Home தமிழகம் புதுச்சேரி - சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் சிவக்கொழுந்து

புதுச்சேரி – சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் சிவக்கொழுந்து

கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததது. அதையடுத்து, நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தது. அதனை தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து அனுப்பிய கோப்புகளின் அடிப்படையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதையடுத்து ஜனாதிபதி ஆட்சி புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார். அதேசமயம் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம் மற்றும் மகன் ரமேஷ் ஆகியோர் இன்று (28/02/2021) புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். மேலும் சில முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.எஸ். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments