Tuesday, October 3, 2023
Home உலகம் ஆப்கானிஸ்தானில் 30 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - ராணுவம் அதிரடி

ஆப்கானிஸ்தானில் 30 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு – ராணுவம் அதிரடி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான கபிஷாவில் உள்ள நிஜிராப் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தலீபான் பயங்கரவாதிகள் ஒரே இடத்தில் கூடியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் 2 படைப்பிரிவுகள் கூட்டாக இணைந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் சரமாரி தாக்குதல் நடத்தினர். ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலில் 30 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 6 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.‌

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments