Tuesday, March 28, 2023
Home தமிழகம் Google Pay உள்ளிட்ட செயலிகள் மூலம் ஓட்டுக்கு பண விநியோகம்? தேர்தல் அலுவலருக்கு புகார்

Google Pay உள்ளிட்ட செயலிகள் மூலம் ஓட்டுக்கு பண விநியோகம்? தேர்தல் அலுவலருக்கு புகார்

செயலிகள் மூலம் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கக்கோரி தமிழக தேர்தல் அலுவலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சர்கள் சிலர் பொது மக்களுக்கு Google pay, phonePe, Paytm, amazonpay போன்றவற்றால் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யும் திட்டத்தில் இருப்பதாகவும், அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழக தேர்தல் அலுவலருக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்ரமணியம் மனு ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அவரது மனுவில், ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி வேலுமணி ஆகியோர் பணபரிவர்த்தனை செயலிகள் மூலமாக பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் விநியோகிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், தேர்தலுக்கு முந்தைய 4 நாட்களில் பணத்தை விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதனால் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆகவே இது போன்ற செயலிகள் மூலமாக பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும். தவறும்பட்சத்தில் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments