Friday, September 29, 2023
Home தமிழகம் Google Pay உள்ளிட்ட செயலிகள் மூலம் ஓட்டுக்கு பண விநியோகம்? தேர்தல் அலுவலருக்கு புகார்

Google Pay உள்ளிட்ட செயலிகள் மூலம் ஓட்டுக்கு பண விநியோகம்? தேர்தல் அலுவலருக்கு புகார்

செயலிகள் மூலம் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கக்கோரி தமிழக தேர்தல் அலுவலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சர்கள் சிலர் பொது மக்களுக்கு Google pay, phonePe, Paytm, amazonpay போன்றவற்றால் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யும் திட்டத்தில் இருப்பதாகவும், அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழக தேர்தல் அலுவலருக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்ரமணியம் மனு ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அவரது மனுவில், ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி வேலுமணி ஆகியோர் பணபரிவர்த்தனை செயலிகள் மூலமாக பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் விநியோகிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், தேர்தலுக்கு முந்தைய 4 நாட்களில் பணத்தை விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதனால் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆகவே இது போன்ற செயலிகள் மூலமாக பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும். தவறும்பட்சத்தில் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments