Wednesday, March 22, 2023
Home இந்தியா சோனியா முன்வைக்கும் 3 பரிந்துரைகள் - பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

சோனியா முன்வைக்கும் 3 பரிந்துரைகள் – பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். 

கொரோனா கெடுபிடிகளை சமாளிக்க மூன்று பரிந்துரைகளை சோனியா காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனவே, இதனை சரிசெய்ய உற்பத்தியை அதிகரிப்பதோடு, புதிய தடுப்பு மருந்துகளுக்கான அனுமதியை தாமதமின்றி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும், ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும், ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதால், ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியில் மீண்டும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ள சோனியா,

இதற்கு தீர்வு காணும் வகையில், ஏழை – எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். 

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments