Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாசோனியா முன்வைக்கும் 3 பரிந்துரைகள் - பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

சோனியா முன்வைக்கும் 3 பரிந்துரைகள் – பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். 

கொரோனா கெடுபிடிகளை சமாளிக்க மூன்று பரிந்துரைகளை சோனியா காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனவே, இதனை சரிசெய்ய உற்பத்தியை அதிகரிப்பதோடு, புதிய தடுப்பு மருந்துகளுக்கான அனுமதியை தாமதமின்றி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும், ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும், ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதால், ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியில் மீண்டும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ள சோனியா,

இதற்கு தீர்வு காணும் வகையில், ஏழை – எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments