Tuesday, October 3, 2023
Home தமிழகம் கல்பாக்கம் அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய மிகப்பெரிய டால்பின்.

கல்பாக்கம் அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய மிகப்பெரிய டால்பின்.

கல்பாக்கம் அருகே கடற்கரையில் மிகப்பெரிய டால்பின் இறந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியது.வனத்துறையினா் டால்பினை கடற்கரையோரம் புதைத்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள உய்யாலி குப்பம் மீனவா் குடியிருப்பு கடற்கரை பகுயில் இன்று காலை 9 மணியளவில் ஒரு டால்பின் இறந்த நிலையில் கரையொதுங்கி கிடந்தது.மீனவா்கள் கல்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.போலீசாா் வந்து பாாத்துவிட்டு வனத்துறையினருக்கு தெரிவித்தனா்.

செங்கல்பட்டு வனத்துறை ரேஞ்சா் D.பாண்டுரங்கன் தலைமையில் வனத்துறையினா் வந்து ஆய்வு செய்தனா்.அது சுமாா் 350 கிலோ எடையுடையது.3 மீட்டா் நீளமும் 2.5 மீட்டா் சுற்றளவும் உடையது.அதன் வயது சுமாா் 3 .

இதையடுத்து வனத்துறை மருத்துவா் கடற்கரைக்ககே வந்து டால்பினை பிரேத பரிசோதனை செய்தாா்.அதன்பின்பு நடுக்கடலில் கப்பலில் அடிப்பட்டு இந்த டால்பின் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று அறிவித்தாா்.

அதன்பின்பு உள்ளூா் மீனவா்கள் உதவியுடன் எா்த்முவா் மூலம் கடற்கறையோரம் மிகப்பெரிய பள்ளம் தோண்டி உயிரிழந்த டால்பின் உடலை புதைத்தனா்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments