Tuesday, June 6, 2023
Home தமிழகம் புறநகர் ரயில்கள் குறித்த சென்னை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு

புறநகர் ரயில்கள் குறித்த சென்னை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் விவரம் கீழ்வருமாறு:

வார நாட்கள் (திங்கள் – சனி):

1) சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம்: 150 சேவைகள்.

2) சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை மார்க்கம்: 64 சேவைகள்.

3) சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம்: 68 சேவைகள்.

4) சென்னை கடற்கரை – தாம்பரம்/ செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம்: 152 சேவைகள்.

என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில்:

1) சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம்: 32 சேவைகள்.

2) சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மார்க்கம்: 24 சேவைகள்.

3) சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம்: 12 சேவைகள்

4) சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கம்: 18 சேவைகள்.

என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

குறிப்பு: இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது.

இந்த திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை *நாளை (22.04.2021) வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது* .

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments