Monday, December 4, 2023
Home இந்தியா கேரளா: பினராயி விஜயன் அரசு மே 20-இல் பதவியேற்பு

கேரளா: பினராயி விஜயன் அரசு மே 20-இல் பதவியேற்பு

கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மே 20-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) மற்றும் இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இடது ஜனநாயக முன்னணியின் அமைச்சரவை குறித்து ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த விஜயராகவன் கூறியதாவது:

21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை கேரள அரசில் இடம்பெறுகிறது. கொரோனா சூழல் காரணமாக குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையுடன் மே 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் (எம்), ஜனதா தளம் (எஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத் தலா 1 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 2 இடங்கள் சுழற்சி முறையில் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஜனாதிபத்ய கேரள காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சிகளும், அதன்பிறகு கேரள காங்கிரஸ் (பி) மற்றும் காங்கிரஸ் (எஸ்) அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்தவர் பேரவைத் தலைவர் பொறுப்பை வகிப்பார். பேரவை துணைத் தலைவர் பொறுப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமைக் கொறடா பொறுப்பு கேரள காங்கிரஸ் (எம்)-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கான இலாகாக்களை முடிவு செய்யும் அதிகாரத்தை இடது ஜனநாயக முன்னணி முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியுள்ளது என்றார் அவர்.

கேரள பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க வால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments