Wednesday, March 29, 2023
Home இந்தியா லட்சத்தீவுக்கு செல்ல காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு

லட்சத்தீவுக்கு செல்ல காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு

யூனியன் பிரதேசமான லட்சத் தீவில் சுமார் 66,000 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள். மத்திய அரசின் சார்பில் லட்சத் தீவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரபுல் கோடா படேல் கடந்த ஜனவரியில் நியமிக்கப்பட்டார்.பசு வதை தடுப்பு சட்டம், கடலோர பாதுகாப்பு சட்டம், சமூக விரோத தடுப்பு சட்டம் ஆகியவற்றை புதிய தலைமை நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல் கண்டிப்புடன் அமல்படுத்தி வருகிறார்.

பள்ளி உணவகங்களில் கோழி, மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை உட்பட அவர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பின்னணியில், கேரள காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹைபி ஈடன், டி.என்.பிரதாபன் மற்றும் காங்கிரஸ் மீனவரணி சட்ட ஆலோசகர் சி.ஆர். ராகேஷ் சர்மா ஆகியோர் லட்சத்தீவுக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தனர். லட்சத் தீவு தலைநகர் கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி, காங்கிரஸ் எம்.பி.க்களின் பயணத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments