Friday, May 26, 2023
Home தமிழகம் இந்தியாவை 2 ஆக பிரியுங்க. இறங்கி நானும் விளையாடவா? - சீமான்

இந்தியாவை 2 ஆக பிரியுங்க. இறங்கி நானும் விளையாடவா? – சீமான்

சென்னை

கொங்கு நாடு தனி மாநிலம் என்பது ஜாதிய அடிப்படையிலான பிரிவினை; அப்படி பிரிக்க வேண்டுமானால் இந்தியாவையே 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நானும் தெருவில் இறங்கி விளையாடவா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

கொங்கு நாடு தனி மாநில விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசிடம் ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம். ஆனால் அதை எல்லாம் மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. தமிழக மக்கள் கேட்காத கொங்கு நாடு தனி மாநிலம் என்பதை நிறைவேற்ற முயற்சிக்கிறது.

பொதுவாக மாநிலங்கள் பிரிவினை என்பது மொழி, இனம், நிலம் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜாதிய அடிப்படையில் கொங்கு நாடு என பிரிக்க முயற்சிப்பதை எப்படி ஏற்க முடியும்? அப்படியானால் இந்தியாவை 39 நாடுகளாக பிரிக்க வேண்டும்.

நாங்கள் கேட்பது மாநில தலைநகரங்கள் 4 ஆக இருக்கட்டும் என்பதுதான்.. நான் சொல்வதைத்தானே ஜெகன் மோகன் ரெட்டி, மமதா பானர்ஜி பேசுகிறார்கள். உண்மையில் இந்தியாவை தென்னிந்தியா, வட இந்தியா என உலக நாடுகளின் பிரிவினையின் அடிப்படையில் பிரிக்க வேண்டும்.

கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலமாக்கினால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கூட ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்பதுதான் நிலைமை.

கொங்கு நாடு தனி மாநிலப் பிரிவினையை தொடங்கினால் இந்தியாவை 2 ஆக பிரியுங்கள் என நான் இறங்குவேன். எல்லோரும் பூனைக்கு மணி கட்டுவது யார் என காத்திருக்கிறார்கள். நான் தெருவில் இறங்கி விளையாட தொடங்கவா? இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments