Tuesday, March 21, 2023
Home பொது கீழடி அகழாய்வில் ஆபரணங்கள் கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் ஆபரணங்கள் கண்டெடுப்பு

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் ஆண், பெண் பயன்படுத்திய ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி மற்றும் அகரத்தில் ஆண்கள், பெண்கள் காது மற்றும் கழுத்தில் அணியும் ஆபரணங்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன.

பாசி, பவளம், சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ள இவைகளில், நடுவில் துளை போன்ற அமைப்பும் காணப்படுகிறது. செடி, கொடிகளில் கோர்த்து இதனை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.

வட்ட வடிவிலான சுடுமண் காதணிகளில் உள்ள துளைகள் பெரிய அளவில் காணப்படுகின்றன. சுடுமண் காதணிகளில் அழகுக்காக புள்ளிகள் உள்ளிட்டவைகளை வரைந்துள்ளனர்.

கீழடி, அகரத்தில் எடுக்கப்பட்ட காதணிகளை விரைவில் காட்சிக்கு வைக்க தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கீழடியில் திறந்தவெளி கண்காட்சி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கீழடிக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments