Friday, September 29, 2023
Home பொது கீழடி அகழாய்வில் ஆபரணங்கள் கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் ஆபரணங்கள் கண்டெடுப்பு

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் ஆண், பெண் பயன்படுத்திய ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி மற்றும் அகரத்தில் ஆண்கள், பெண்கள் காது மற்றும் கழுத்தில் அணியும் ஆபரணங்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன.

பாசி, பவளம், சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ள இவைகளில், நடுவில் துளை போன்ற அமைப்பும் காணப்படுகிறது. செடி, கொடிகளில் கோர்த்து இதனை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.

வட்ட வடிவிலான சுடுமண் காதணிகளில் உள்ள துளைகள் பெரிய அளவில் காணப்படுகின்றன. சுடுமண் காதணிகளில் அழகுக்காக புள்ளிகள் உள்ளிட்டவைகளை வரைந்துள்ளனர்.

கீழடி, அகரத்தில் எடுக்கப்பட்ட காதணிகளை விரைவில் காட்சிக்கு வைக்க தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கீழடியில் திறந்தவெளி கண்காட்சி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கீழடிக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments