Monday, September 25, 2023
Home தமிழகம் சென்னையில் 13 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா

சென்னையில் 13 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு கடந்த 13-ம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பின்னர், அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில், மேலும் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 13 மாணவர்களும் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சித்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments