Thursday, May 25, 2023
Home இந்தியா அசாமில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி - நீதி விசாரணைக்கு உத்தரவு

அசாமில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – நீதி விசாரணைக்கு உத்தரவு

கவுகாத்தி

அசாமில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். ஒன்பது போலீசார் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

வட கிழக்கு மாநிலமான அசாமின் தரங் மாவட்டம் தலாபூர் பகுதியில் 27 ஆயிரம் சதுர அடி பரப்பில் விவசாய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதையொட்டி அப்பகுதியை ஆக்கிரமித்திருந்த 800 குடும்பங்களை வெளியேற்ற அரசு அதிகாரிகள், போலீசாருடன் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற மறுத்து போலீசாரை கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கினர்.

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தினர். ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதைத் தொடர்ந்து கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த காட்சியை படம் பிடித்த கேமராமேனை ஒருவர் கட்டையால் அடித்து ஓட ஓட விரட்டி வந்தார். உடனே போலீசார், விரட்டியவரை சூழ்ந்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து மூர்ச்சையானார். அப்போதும் ஆத்திரம் அடங்காத கேமராமேன், விழுந்து கிடந்தவரை அடித்து தாக்கிய காட்சி சமூக ஊடகங்களில் வெளியானது.இந்த வன்முறையில் இருவர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒன்பது போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், தலாபூரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் மரணம் மற்றும் மோதலில் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments