தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய முறைப்படி அனைத்து தேர்வுகளுக்கு முன்பாக தமிழ் மொழித்தாள் தேர்வு நடத்தப்படும்.
தமிழ் மொழித்தாள் தேர்வில் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்படும்.
விரைவில் அறிவிக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் புதிய முறை அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.