Tuesday, November 28, 2023
Home தமிழகம் விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் மறியல் போராட்டம் - விஜய் வசந்த் உட்பட...

விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் மறியல் போராட்டம் – விஜய் வசந்த் உட்பட 400 பேர் கைது

மத்தியில் ஆளும் பாஜக அரசின் விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடக் கோரியும் இந்தியா முழுவதும் அனைத்து கட்சி சார்பில் மாபெரும் பந்த் இன்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, ம.நீ.ம உள்ளிட்ட  கட்சிகள் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், திமுக மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அந்தோணி, மோகன், இளங்கோ உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் பின்னர் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

எமது நிருபர்
நாஞ்சில் அற்புதம்.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments