Tuesday, March 21, 2023
Home இந்தியா போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு அக்.7 வரை போலீஸ் காவலில் விசாரணை

போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு அக்.7 வரை போலீஸ் காவலில் விசாரணை

சொகுசுக்கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரிடம் அக்டோபர் 7ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சமீப காலமாக போதைப்பொருள் வழக்குகளில் அதிகமாக திரை உலகை சேர்ந்தவர்கள் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கோவாவிற்கு 3 நாட்கள் சொகுசு கப்பலில் சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் வந்தது. இந்த சொகுசு கப்பலில் ஒருவர் பயணிக்க ரூ.10 லட்சம் டிக்கெட் என்றும் அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுவதாகவும் தெரிய வந்தது.

இந்த சொகுசு கப்பலில் அதிக வசதி படைத்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என்று பலரும் கலந்து கொள்வது வழக்கமாகும். இந்த சொகுசு கப்பலில் நடத்தப்படும் விருந்துகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் வந்ததை அடுத்து அவர்களும் சாதாரண பயணிகளை போல அந்த கப்பலில் டிக்கெட் எடுத்து பயணித்தனர். இதனை அடுத்து கப்பல் கிளம்பிய சில நிமிடங்களில் கப்பலில் பலரும் போதைப்பொருள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால் அதிகாரிகள் அங்கு திடீரென்று சோதனை நடத்த தொடங்கினர். அங்கு போதை பொருள் பயன்படுத்தியவர்கள், வைத்திருந்தவர்கள் என்று 20க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று அவர்களின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு காவல் துறையினரின் காவலில் வைத்து அக்டோபர் 7ம் தேதி வரை விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments