Wednesday, March 22, 2023
Home இந்தியா ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

“ஹெட்டெரோ” நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 40 லட்சம் “ஸ்புட்னிக் லைட்” தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நேற்று(அக்.10) அனுமதி வழங்கி உள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, மக்களுக்கும் அவை செலுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ரஷ்யாவின் “ஸ்புட்னிக் – வி” தடுப்பூசிக்கும், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா, சைடஸ் கேடிலா உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளுக்கும் அவசர காலத்தில் பயன்படுத்த டி.சி.ஜி.ஐ எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

இதற்கிடையே ரஷ்யாவின் மற்றொரு தடுப்பூசி யான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை, தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் ஹெட்டேரோ பையோபார்மா லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஒரு டோசாக மட்டுமே செலுத்தப்பட வேண்டிய இந்த தடுப்பூசிக்கு அவசர காலத்தில் பயன்படுத்த, டி.சி.ஜி.ஐ., இதுவரை அனுமதி வழங்கவில்லை.

ஹெட்டேரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், ஆறு மாத காலத்திற்குள் உபயோகிக்கப்பட வேண்டும் என்பதால், அதை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கக்கோரி, மத்திய அரசிடம் இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷேவ் கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று ஹெட்டெரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 40 லட்சம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கி உள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments