Friday, September 29, 2023
Home தமிழகம் இலவச கண் சிகிச்சை முகாம் - சமதா கட்சி சார்பாக நடைபெற்றது

இலவச கண் சிகிச்சை முகாம் – சமதா கட்சி சார்பாக நடைபெற்றது

இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் சமதா கட்சி சார்பாக நேற்று நடைபெற்றது. சென்னையை அடுத்த பெரிய மாத்தூரில் நடைபெற்ற இந்த முகாமில், டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் பயனாளர்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயன்பெற்றனர்.

இதில் சமதா கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் என்.ஏ.கோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமதா கட்சி, தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், துணைத்தலைவர் சந்திரன், ஊடகபிரிவு மாநிலத் துணைத்தலைவர் சாமுவேல், முன்னாள் கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி மற்றும் தாராபாய் சத்தியமூர்த்தி, டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மைய பொதுமேலாளர் அருள் மற்றும் சமதா கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மகளிரணி வடசென்னை மாவட்டத் தலைவர் சோபியா லாரன்ஸ், துணைத்தலைவர் மரியசெல்வி, செயலாளர் நிஷா மேரி, துணைச்செயலாளர் கிறிஸ்டினா பிளாரன்ஸ், பொருளாளர் கேதரின் மேரி மற்றும் மகளிரணி இராயபுரம் பகுதித்தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு வரும் 17ந் தேதி இலவசமாக கண்ணாடி வழங்கப்படுகிறது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments