Friday, September 29, 2023
Home இந்தியா மிசோரத்தில் அதிக குழந்தை பெற்ற பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.

மிசோரத்தில் அதிக குழந்தை பெற்ற பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.

மிசோராம் மாநிலத்தில் அதிக குழந்தை பெற்ற பெற்றோருக்கு அம்மாநில அமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் பூர்வீகக் குடிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மிசோரம் விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தனது அய்சால் கிழக்குத் தொகுதியில் அதிக குழந்தைகளை பெறும் பெற்றோருக்கு பரிசுகள் வழங்குவதாக அறிவித்தார். இதன்படி துய்தியாங் பகுதியை சேர்ந்த 15 பிள்ளைகள் பெற்றிருக்கும் பெண் ஒருவருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்தார். அடுத்தபடியாக 13 பிள்ளைகள் பெற்ற பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாயும், 12 பிள்ளைகள் பெற்ற தலா 3 பேருக்கு பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கி அமைச்சர் கவுரவித்தார்.

மற்ற மாநிலங்களில் சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 500 பேர் வசிப்பதாகவும், ஆனால் தங்கள் மாநிலத்தில் 52 பேர் மட்டுமே வசிப்பதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராபர்ட் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments